தோகைமலை, செப். 10: கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் பண்ணப்பட்டி ஊராட்சி கோமாளிபட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (47). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது சைக்கிளில் பண்ணப்பட்டி அருகே உள்ள பாறைபட்டி முருகன் கோவில் மேடு அருகில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வடவம்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(36) என்பவர் ராஜலிங்கத்தின் சைக்கிள் மீது மோதினார்.