மினிலாரி மோதி வாலிபர் பலி

சின்னசேலம், செப். 10: சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் சங்கர்(31). இவர் நேற்றுமுன்தினம் தனது மாமனார் ஊரில் நடக்க இருந்த கிடா விருந்து நிகழ்ச்சிக்கு பைக்கில் தன் மனைவி தனுசியா(27), மகள் மோஷிகா ஆகியோருடன் திம்மாபுரம் சாலையில் இருந்து கல்லாநத்தம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே  அதிவேகமாக வந்த பால் வண்டி (மினி லாரி) பைக்மீது மோதியது. இதில் சங்கர், தனுசியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது மனைவி தனுசியா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பால்வண்டி டிரைவரை தேடி வருகின்றனர்.  

Related Stories: