×

தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்

ராமநாதபுரம், ஆக.22:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை எழுத விரும்புவோர் விண்ணப்பங்களை இன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேர்வு கட்டணமாக ரூ.50 சேர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் அளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 7.9.2019 ஆகும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கபடமாட்டாது. இத்தேர்வு சம்பந்தமாக கூடுதல் தகவல்களை விண்ணப்பம் பதிவிறக்கம்  செய்யும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை