திருப்பூர், ஆக. 22: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நகருக்கு மத்தியில் பெரிய பரப்பளவில் உள்ள இப்பள்ளியில், தொடர் பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியில் இருந்த, மூன்று கம்ப்யூட்டர்கள், வெப் கேமரா, ஒரு பிரிண்டர் ஆகியவை திருடி செல்லப்பட்டன. தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, அவலகம் என அனைத்து அறைகளுக்குள்ளும், திருடர்கள் எளிதாக நுழையும் வகையில், கட்டடம், பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது.