ஊட்டி, ஆக. 22: ஊட்டியில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஊட்டியில் உள்ள தேனிலவு படகு இல்லம் கடந்த 2006ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த படகு இல்லம் முழுக்க இரும்பு மற்றும் பலகைகள் கொண்டு அமைக்கப்பட்டது. இது வெகு காலம் தாக்குப்பிடிக்கவில்லை. தற்போது கூரைகள் அனைத்தும் உடைந்து காணப்பட்டது. அதேபோல், நடைபாதைகளும் உடைந்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் படகு இல்லம் செல்லும் நடைபாதை மூடப்பட்டது. படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் மாற்றுப்பாதையில் கடந்த சில ஆண்டுகளாக அனுப்பப்பட்டனர்.