அரியலூர், ஆக. 20: அரியலூர் மாவட்ட விளையாட்டங்கில் திருமானூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி துவக்கி வைத்தார். பள்ளி, கல்லூரியில் பயிலும் 14, 17, 19 வயது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எரிதல், குண்டு எரிதல், 100, 200, 300 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடைதாண்டி ஓட்டம் உட்பட 47 வகையான போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு போட்டிக்கு திருமானூர் குறுவட்ட செயலாளர் அக்பர்கான் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, செந்தில்வேல் வில்லாளன், ரவி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.