அவிநாசி,ஆக.20:கொடிகாத்த குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி சட்டமன்ற சபாநாயகரிடம் அவிநாசியில் நேற்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். அவிநாசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கொடிகாத்த குமரன்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொடிகாத்த குமரன் நகர் 1995ம் வருடம் உருவாக்கப்பட்டது. இன்று வரை அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாக்கடைவசதி, குடிநீர் இணைப்பு ஆகியன இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றோம்.