சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவன்மலையில் சிறப்பு வழிபாடு

காங்கயம், ஆக. 14:   சுதந்திர தின விழா நாளை (15ம் ேததி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு வழிபாடு மதியம் 12.30 மணிக்கு நடக்கிறது. மதியம் 1 மணியளவில் சமபந்தி பொது விருந்து நடைபெறுகிறது. இதில் அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோயில் உதவி ஆணையர், செயல் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: