விழுப்புரம், ஆக. 14: விழுப்புரம் மாவட்டத்தில் 6 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் காவல்துறையில் பணியாற்றிவரும் 160 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்ஐக்களாக பணியாற்றி
வந்த விஜி, தமிழ்ச்செல்வி, கவிதா, ஜெய்சங்கர், சுமதி, ராதிகா, கீதா ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து வடக்குமண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல் ஏற்கனவே மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் மூன்று பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.