விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள இருசாளகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மனைவி விருத்தாம்பாள் (45). இவர் தனது குடும்பத்துடன் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இருசாளகுப்பத்துக்கு சொந்த வேலை காரணமாக மகளுடன் பஸ்சில் சென்றுள்ளார். விருத்தாசலம் பாலக்கரை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, தான் வைத்திருந்த கைப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் 2 தோடு, 3.5 பவுன் தங்க நகை, ரூ.4 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். பின்னர் புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தம் சென்று தான் இருந்த இடத்தில் கைப்பையை தேடினார்.