புளியங்குடி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புளியங்குடி, ஜூலை 23:  புளியங்குடி பரமானந்தா நடுநிலைப்பள்ளியில் 2002-03ம் ஆண்டில் 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாகி எபநேசர் கமலம் முன்னிலை வகித்தார். செயலர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்து பேசினார். மாரிராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியை செல்வசுகுணா சிறப்புரை ஆற்றினார். பள்ளி நிர்வாகி, செயலர், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். முன்னாள் மாணவர்களுக்கு பேனா பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை சண்முகானந்த், மாரிராஜ், மகேந்திரன், சிவராமன், லோகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: