×

சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

தொண்டி, ஜூலை 18:  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்வு மற்றும் கூட்டம் நடைபெற்றது. தொண்டி தமுமுக தலைவர் காதர் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் கௌஸ், மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பட்டாணி மீரான் வரவேற்றார். மாநில சுற்றுச்சூழல் அணி பொருளாளர் ஜிப்ரி, பனைக்குளம் பரக்கத்துல்லா, முகவை அப்துல்லா இயக்கம் குறித்து பேசினர். தமுமுக மமக தலைவராக காதர், செயலாளராக சம்சுதீன் நவ்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உடனடியாக சரி செய்யவேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. செயலாளர் பரக்கத் அலி, மருத்துவ அணி நிஸ்தார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை