×

தவ்கித் ஜமாத் கூட்டம்

தொண்டி, ஜூலை 16:  தொண்டியில் தமிழ்நாடு தவ்கித் ஜமாத் சார்பில் வட்டார அளவிலான கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செய்யது நெய்னா தலைமை வகித்தார். தொண்டி தலைவர் செய்யது அகமது முன்னிலை வகித்தார். நாகைமாவட்டத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டதற்காக தாக்கியவர்களை கைது செய்ய கோரியும், இது போன்ற செயல்கள் மேலும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் முஹமது பேசுகையில், வடமாநிலங்கள் போல தமிழ்நாட்டிலும் மாட்டின் பெயரில் வன்முறை பரவால் இருக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் இது குறித்து உரியகவனம் செலுத்தி
குற்றவாளிகளுக்குகடும் தண்டனைவழங்க வேண்டும் என்றார். நம்புதாளை தலைவர் அஜ்மல் கலாம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை