சுகாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம்

அவிநாசி, ஜூலை 10: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

 இந்த பயிற்சி முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாந்திலட்சுமி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை பயிற்றுனர் சுதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி ஆகியோர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். இதில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.   இதில் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள், தொடக்கப்பள்ளிஆசிரியர்கள் மற்றும் சேவூர், துலுக்கமுத்தூர், நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: