×

டூவீலர் திருடிய வாலிபர் கைது

காரைக்குடி, ஜூன் 27:  காரைக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போனது. இதுகுறித்து காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் கடந்த வாரம் மாரிமுத்து என்பவர் இருசக்கர வாகனம் திருடு போனது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவியை பார்த்த போது இருசக்கர வாகனத்தை திருடியது புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த நாகராஜன்(38) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் 8 டூவீலரையும் மீட்டு நாகராஜனை சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை