தொழிலாளி கொலையில் கர்ப்பிணி மனைவி கைது

மயிலம், ஜூன் 27: மயிலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கர்ப்பிணி மனைவி கைது செய்யப்பட்டார். மயிலம் அருகே வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (37), தொழிலாளி. இவரை காணவில்லை என இவரது மனைவி பாக்கியலட்சுமி (31) கடந்த மே 2ம் தேதி மயிலம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமியின் அக்கா கணவர் தென்

ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (43) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அதில் கலியமூர்த்திக்கும், பாக்கியலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்ததும், இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த முருகனை கலியமூர்த்தி, அவரது நண்பர் கொடிமா கிராமத்தை சேர்ந்த திருமண புரோக்கர் சங்கர் (40) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி சங்கர், கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக முருகனின் மனைவி பாக்கியலட்சுமியும் போலீசார் கைது செய்தனர். பாக்கியலட்சுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முருகன், பாக்கியலட்சுமி தம்பதியருக்கு ஏற்கனவே இந்துஜா, சைலஜா என்ற 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: