குடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது

திருக்கோவிலூர், ஜூன் 26: திருக்கோவிலூர் அடுத்த தேவனூரை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன்   மணிகண்டன் 32, இவர் நேற்று முன்தினம் வீரபாண்டியில் நின்று   கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் குடிபோதையில் அங்கு வந்ததாக தெரிகிறது. அவர்    மணிகண்டனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மணிகண்டன் முண்டியம்பாக்கம்   அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக   அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அரகண்டநல்லூர் காவல்நிலையத்தில்   கொடுத்த புகாரின்பேரில் போலிசார் வழக்கு பதிந்து  சுதாகரை கைது செய்தனர்.

Related Stories: