ஆலங்குளம், ஜூன் 26: ஆலங்குளம் அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள காங்கேயன்குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி மகன் பிரபு(38). பிளம்பரான இவர், நேற்று வெள்ளாளன்குளம் விலக்கு அருகே நெல்லை - தென்காசி சாலையோரத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்த பிரபு மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த சீதபற்பநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பிரபு உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து கார் டிரைவர் தென்காசி அடுத்த மத்தளம்பாறையை சேர்ந்த மாடசாமி மகன் சிவபாலகிருஷ்ணன்(25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.