தர்மபுரி, ஜூன் 25: தர்மபுரி டவுன் சூடாமணி தெருவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில், தனியார் மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். தர்மபுரி டவுன், சூடாமணி தெருவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி டவுன் சூடாமணி தெருவில், 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த தெருவில் இருபுறமும் குடியிருப்பு வீடுகள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2500 சதுர அடியில் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அந்த இடத்தில் இருந்த வீட்டை இடித்து விட்டு, தனியார் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.