சிவகங்கை, ஜுன் 25: உணவு பொருட்கள் வாங்கும் போது காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பார்த்து வாங்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடமிருந்து வாங்கும்போது பொட்டலமிட்ட உணவுப் பொருட்கள் மீது அச்சிடப்பட்டுள்ள லேபிள்களில் அந்த உணவுப் பொருள் எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என பார்க்க வேண்டும்.