கொடைக்கானல், ஜூன் 25: கொடைக்கானலில் உள்ள பள்ளிகளில் புத்தகங்கள் வழங்க தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை பெரும்பாலான பள்ளிகளுக்கு முழுமையான புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் பாடம் நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் முதல் தவணையாக ஜூன் முதல் வாரத்தில் அதுவும் பாதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 4, 5,6 ஆகிய வகுப்புகளுக்கு முற்றிலுமாக வழங்கப்படவில்லை. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கு பாதி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.