கட்டுமான தொழிலாளர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாகை, ஜூன் 19: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும் 21ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கையை அதிக அளவில் மேற்கொள்ள சென்னை தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி நாகை மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது. எனவே கட்டுமானம் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என்று உதவி ஆணையர் தர் தெரிவித்துள்ளார்.

Related Stories: