நாகை, ஜூன் 19: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும் 21ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கையை அதிக அளவில் மேற்கொள்ள சென்னை தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.