வெள்ளை கோடு போடும் பணி தீவிரம்

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 18:   திருவெண்ணெய்நல்லூர்- திருக்கோவிலூர் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் இருந்த வெள்ளைநிறக்கோடு தேய்ந்து விட்டதால் வாகனஓட்டிகள் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதிவேகமாக சென்று வேகத்தடையில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்ற நெடுஞ்சாலைதுறையினர் நேற்று காலை வேகத்தடைகளுக்கு வெள்ளைநிறக்கோடு போட்டு அடையாளம் காட்டும் பணியை துவக்கினர். சாதாரண வெள்ளை நிறவண்ணம் பூசப்பட்டு வருவதால், தொடர் வாகன போக்குவரத்தால் அடையாளங்கள் தேய்ந்து அழிந்து விடுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை கொண்டு இப்பகுதிகளில் வண்ணம் தீட்டப்பட்டால் நீண்டநாட்கள் தேய்ந்து போகாமல் நிலைத்திருக்கும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: