பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

விழுப்புரம், ஜூன் 18: விழுப்புரம்   மாவட்டம் மேல்மலையனூர் அருகே கொடுக்கன்குப்பத்தைச் சேர்ந்தவர்  குமார்(35).  இவர் தொடர்ந்து சாராயம் கடத்துவது, விற்பனை  செய்வது போன்ற  தொழிலில் ஈடுபட்டு வந்தார். போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தாலும்  ஜாமீனில் வெளியே வரும் அவர் தொடர்ந்து இத்தொழிலில்  ஈடுபட்டு வந்தார். இவரது  நடவடிக்கையை தடுக்கும் வகையில் தடுப்புக்காவலில்  கைது செய்ய எஸ்பி  ஜெயக்குமார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை  ஏற்றுக்கொண்ட ஆட்சியர்  அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.  இதனைத்தொடர்ந்து போலீசார் குமாரை கைது  செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: