திருப்பூர், ஜூன் 14: பத்ம விருதுக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருது வழங்க அறிவித்துள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணியாற்றியவர்களுக்கு வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தினவிழா பத்ம விருதுகள் வாங்க அறிவிக்கப்பட்டுள்ளது.