நாமக்கல், ஜூன் 14: குடும்பத்தில் நடைபெறும் விழாக்களில், பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அரசு தோட்டக்கலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் செம்மேடு மற்றும் படசோலையில் உற்பத்தி செய்யப்படும் நடவுச்செடிகள் மற்றும் விளைபொருட்கள், உடனுக்குடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையத்தில், தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் சில்லரை விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.