கடம்பூர் அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

கெங்கவல்லி, ஜூன் 13:கெங்கவல்லி ஒன்றியம் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. இதில் குழந்தை தொழிலாளர் மற்றும் பள்ளி செல்லாமல் இடைநிற்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கலந்துரையாடல் நடந்தது. முன்னதாக, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு மீனாம்பிகா வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஆசிரியைகள் கல்பனா, ஜெயமணி, தமிழ்ச்செல்வி பங்கேற்றனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Related Stories: