பொன்னேரி, ஜூன் 12 : மீஞ்சூர் அருகே பட்டப்பகலில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 சவரன் நகை 12 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மீஞ்சூர் அடுத்த நாலூர் கேசவபுரம் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (45), சென்னையில் மின்வாரிய ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி (40), மகன் மோகன் (22). உமாதேவி நாலூர் ஏரிக்கரை பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு உமாதேவி கடைக்கு சென்றார். வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்த அவரது மகன் மோகன் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.