ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் வீதி உலா

சீர்காழி, ஜூன் 11: சீர்காழி அருகே சட்ட நாதபுரம் ஜேஎஸ் நகரில்  ராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி மாத உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் சட்டநாதபுரம் உப்பனாற்றில் இருந்து சக்தி கரகம் பால் குடம் எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வந்து கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: