திண்டுக்கல், ஜூன் 11: கொடைக்கானல் தாண்டிக்குடியில் உள்ள சாலைகள், தெருக்களில் பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதை அகற்றாததால், நானும் ஆக்கிரமித்து புதுப்பிக்கும் விழா நடத்த உள்ளேன். இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஒருவர் திருமண பத்திரிக்கை போல நோட்டீஸ் அச்சடித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் விநியோகித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்தவர் கணேஷ்பாபு(50). இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருமண அழைப்பு போல பத்திரிக்கை ஒன்றை பொதுமக்களிடம் விநியோகித்தார். இதில் கூறியிருப்பதாவது: கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பலர் ஆக்கிரமித்துள்ளதால், சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பிணங்கள் மறறும் சுவாமி துக்கி செல்ல முடியவில்லை. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும், போராட்டங்கள் நடத்தினோம். இதன்பின்பு அரசு அதிகாரிகள் கடந்தாண்டு தாண்டிக்குடி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றாவிட்டால், அரசே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடும் என்று 20.8.2018 அன்று நோட்டீஸ் அனுப்பியது.