ஓசூர், ஜூன் 10: ஓசூர் பகுதியில் புதினா விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலையும் உயர்ந்துள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு அனைத்து வகையான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் கொய்மலர்கள் பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, இப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதினா பயிரிட்டுள்ளனர். சாகுபடிக்காக ஏக்கருக்கு ₹25 ஆயிரம் வரையிலும் செலவாகிறது.