பெரம்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் சண்முகம் (45), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கண் பார்வை தெரியாது. இவருடைய 14 வயது மகள் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஷாயின்ஷா (42) என்பவர், தனது வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அலறி கூச்சலிட்டதால், வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார்.