சின்னசேலம், ஜூன் 7: கல்வராயன்மலையில் துரூர்- பொற்பம் இடையிலான மண் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனால் துரூர் பகுதியை சேர்ந்த சின்னராஜ், முருகேசன், காமராஜ், ரமேஷ், வடிவேலு மற்றும் சிலர் சேர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அரசு அனுமதியின்றி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையை அகலப்படுத்தி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பாலப்பட்டு வனவர் பவுல் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சாலை அகலப்படுத்தும் பணியை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.