திருக்கோவிலூர் அருகே இரு தரப்பினர் மோதல் 6 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர்,  ஜூன் 5: திருக்கோவிலூர் அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர்  அரிபுத்திரன் மனைவி சுகந்தா(60). இவரும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம்  என்பவரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள்  வாசலில் கழிவுநீர் செல்வது தொடர்பான பிரச்னை ஏற்பட்டு ஒருவருக்கொருவர்  திட்டி தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த சுகந்தா மற்றும் பரமசிவம்  தரப்பை சேர்ந்த பழனிவேல் மனைவி கவிதா(29) ஆகிய இருவரும்  சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் குறித்து சுகந்தா கொடுத்த புகாரின்பேரில் பரமசிவம், அவரது  மனைவி கண்ணம்மாள், மகன் தர்மதுரை, கவிதா ஆகிய 4 பேர் மீதும், கவிதா கொடுத்த புகாரின்பேரில் சுகந்தா, அவரது மகன் ரவிக்குமார்(18) ஆகிய இருவர் மீதும்  திருப்பாலப்பந்தல் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து இதில் கவிதா,  ரவிக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: