தென்காசி, ஜூன் 5: தென்காசி அடுத்த மேலகரம் பேரூராட்சி உரக்கிடங்கில், நேற்று மாலை திடீரென பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பற்றி எரிந்தது. ஜூவாலையாக கொழுந்துவிட்டு தீயால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் காணப்பட்டது.
தென்காசி அடுத்துள்ள மேலகரம் பேரூராட்சி பகுதியில், சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மேலகரம் சுடுகாடு அருகே உள்ள இடத்தில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் தனியாக பிரிக்கப்பட்டு சிறு சிறு துகள்களாக மாற்றி சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.