காளையார்கோவில், ஜூன் 4: காளையார்கோவில் அருகே சாலையோரம் தடுப்புச்சுவர் இன்றி உள்ள கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குருந்தனி கிராமத்தில் இருந்து நற்புதம் கிராமத்திற்கு செல்வதற்கு முன்பு வளைவில் அபாயகரமான கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு தடுப்புச்சுவர் இல்லை. நற்புதம், சாணாவூரணி, அரசகுளம், அணியவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் இந்த சாலை வழியாகத்தான் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.