தென்காசி, ஜூன் 4: நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள், நேற்று குற்றாலம் இசக்கி ரிசார்ட்சில் திடீரென ஆலோசனை நடத்தினர். மாநில நிர்வாகி இசக்கி சுப்பையா தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், வீரபுத்திரன், சாந்தசீலன், திருமலைக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் இசக்கி சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் அமமுகவில்தான் இருக்கிறோம். வேறு எந்த கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை. நடந்து முடிந்தது எலக்ட்ரானிக் மிஷின் தேர்தல், ஜனநாயக தேர்தல் இல்லை. சென்னையில் எங்கள் வீட்டில் மட்டும் 26 வாக்குகள் பதிவானது. ஆனால் எண்ணிக்கையின்போது வெறும் 10 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இது எப்படி என தெரியவில்லை.