வேப்பனஹள்ளி, மே 30: மேலூர்கொல்லகொட்டாய் பகுதியில் தெரு விளக்கு அமைத்துத் தரக்கோரி, வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பனஹள்ளி ஒன்றியம், நாடுவனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேலூர்கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன்(38), கூலி தொழிலாளி. மேலூர்கொல்லகொட்டாய் பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் வீடுகளுக்குள் அடிக்கடி பாம்புகள் நுழைந்து விடுவது வாடிக்கையாக உள்ளதால், தெருவிளக்கு அமைத்து தரக்கோரி பிடிஓ அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிவசங்கரன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அலறியடித்த அவர் பாம்பை அடித்துக் கொன்றுள்ளார்.