திருப்பூர், மே 30: திருப்பூர் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள நீர் வழி ஓடைகளில் பின்னலாடை நிறுவனங்கள் வேஸ்ட் துணிகளை கொட்டி தீ வைத்துச்செல்வதால் கரும்புகை பரவி பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களில் 7 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகல் என நேரம் பார்க்காமல் வேலை செய்கின்றனர். பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்கள் துணிகளை வெட்டி தைக்கும் போது உதிரி துணிகள் அதிகளவு கழிவுகளாக வெளியேறுகிறது. கோடிக்கணக்கான பீஸ்கள் தைக்கும் போது கழிவுகள் அதே அளவு வெளியேறுகிறது. இவற்றை பிளாஸ்டிக் சாக்கில் போட்டு கட்டி வைக்கின்றனர். அதிகளவு சேர்ந்தவுடன் தங்களுடைய வாகனங்களில் ஏற்றி கொண்டுவந்து இரவு நேரங்களில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாதபோது நீர் ஓடைகளுக்குள் வீசி தீ வைக்கின்றனர்.