டிபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சேலம், மே 29: டிபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் 2018-19ம் ஆண்டில் மெக்கானிக், எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ், சிவில், பெட்ரோ கெமிக்கல். எலக்கட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பயிலும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிளேஸ்மெண்ட் செல் சார்பில் நடைபெற்றது. முகாமில், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டது. மேலும், 3ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு எல்-டி(பி) லிட்., உள்ளிட்ட நிறுவனங்கள் 3 கட்டங்களாக தேர்வு செய்து ஆட்களை தேர்வு செய்தனர். முதற்கட்டமாக எழுத்துத் தேர்வும், 2ம் கட்டமாக கலந்துரையாடலும், 3ம் கட்டமாக நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்லூரியின் தலைவர் துரைசாமி, தாளாளர் கணேசன் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, கல்லூரியின் முதல்வர் ஞானசுந்தர், துணை முதல்வர் சீனிவாசன், வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: