ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

செம்பட்டி, மே 29: சின்னாளபட்டி பாரதி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (33). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு ஆட்களை ஏற்றுவதறணகாக சின்னாளபட்டியில் இருந்து செம்பட்டி நோக்கி ஆட்டோ ஓட்டி வந்தார். ஆதிலெட்சுமிபுரம் அருகே வந்த போது ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குழியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: