முதியவர் மர்ம சாவு

சங்கராபுரம், மே 29: சங்கராபுரம் அடுத்த பிரம்மகுண்டம் முஸ்குந்தா ஆற்றங்கரைக்கு அருகே அதே கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி விவசாய நிலத்திற்கு சென்ற மணி வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அப்போது அவர் சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு ஊராட்சி குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (81) என்பது தெரியவந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: