கணவன் வேலைக்கு செல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

விழுப்புரம், மே 29: விழுப்புரத்தில் கணவன் வேலைக்கு செல்லாத விரக்தியில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் அன்வர்பாஷா (36). இவரது மனைவி சர்தான்பேகம் (32). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், இரண்டு மகள் உள்ளனர். இதனிடையே வாடகை வீட்டில் வசித்து வரும் அன்வர்பாஷா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் அன்வர்பாஷா வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட போது சர்தான்பேகத்துடன் தினமும் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சர்தான்பேகம் நேற்று முன்தினம் மின்விசிறியில் புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: