வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக தனுஷ்குமார் எம்பிக்கு வாழ்த்து

சிவகிரி, மே 29: தென்காசி மக்களவைத் தொகுதியில் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தனுஷ்குமார் எம்பிக்கு வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மக்களவைத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ்குமார் 1.20 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழுடன் சென்னை சென்ற அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் அங்கு நடந்த புதிய எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

 இதைத் தொடர்ந்து ராஜபாளையம் திரும்பிய தனுஷ்குமார் எம்பியை அங்குள்ள அவரது அலுவலகத்தில் வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், நகரச் செயலாளர்கள் டாக்டர் செண்பகவிநாயகம் (சிவகிரி), கேடிசி குருசாமி (ராயகிரி), சரவணன் (வாசுதேவநல்லூர்), மாவட்ட துணைச்செயலாளர் மாடசாமி, விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய துணைச்செயலாளர் மாரித்துரை.  கலை இலக்கிய பகுத்தறிவாளர் அணி மாவட்ட நிர்வாகி நல்லசிவன், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றியச் செயலாளர் ஹிப்சன், பூமிநாதன், மெடிக்கல் சுந்தர், சொர்ணராஜ், மாரியப்பன், வாசுதேவநல்லூர் நகர இளைஞர் அணி செயலாளர் முனீஸ்வரன், தேவிபட்டிணம் முருகன், நாரணபுரம் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

Related Stories: