திருப்பூர், மே 25: வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வரும் திருப்பூரில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதியாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் உள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் சென்னை, ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் அவிநாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் தினசரி நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றன. இதன் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களிலிருந்து திருப்பூருக்கும், திருப்பூரிலிருந்து வெளியூர்களுக்கும் செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் காத்திருக்கின்ற நிலை ஏற்படுகிறது.