வால்பாறை, மே 25: வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை மேகங்கள் சூழ்ந்து, சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என்பதால், தற்போது வால்பாறையில் உள்ள பல்லாயிரக்காணக்கான தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. தோட்டங்களில் கவ்வாத்து வெட்டுதல், சால் வெட்டுதல், நிழல் மரங்கள் கிளை கத்தரிப்பு, நீர்வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.