ஈரோடு, மே 24: பர்கூர் மலைப்பகுதியான தாமரைக்கரை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பர்கூர் போலீசார் தாமரைக்கரை கொங்காடை பிரிவு அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் மது விற்ற பர்கூர் கொங்காடை பகுதியை சேர்ந்த மாதேவன் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்