தலைமை ஆசிரியர் வீட்டில் திருட்டு

செம்பட்டி, மே 14: கொடைரோடு அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் பீட்டர் (54). தனியார் பள்ளி தலைமை ஆசிரியர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலையில் ஊர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டரை பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பீட்டர் அளித்த புகாரில் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: