தேவதானப்பட்டி, மே 14: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் மாணவர்கள் பல போட்டிகளில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் முதலிடம் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான வேலைப்பாடுகளும் நடைபெற்று வருகிறது.