ஊட்டி, மே 10: ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தற்போது உன்னத உதகை திட்டத்தின் கீழ் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. மாறாக, அனைத்து வீடுகளுக்கும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதில் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில், ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு விசில் அடிப்பார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை எடுத்து வந்து ஊழியர்களிடம் கொடுத்தால், அவர்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக வாங்கி லாரிகளில் கொட்டுவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம் போல், தூய்மை பணியாளர்கள் சிலர் பாம்பேகேசில் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக கேட் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு விசில் அடித்தனர். இதன் பின்அப்பகுதி வாசிகள் குப்பைகளை பை மற்றும் தொட்டிகளில் கொண்டு வந்து தூய்மை பணியாளர்களிடம் கொடுத்துள்ளனர். அப்ேபாது, ஒரு வாலிபர் குப்பைகளை எடுத்து வந்து நேரடியாக லாரியில் கொட்டியுள்ளார். இதில், குப்பைகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தலை மீது விழுந்தது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கேட்டதற்கு அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பணியாளர்களை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.